நமது தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லூரி 1973ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தற்போது 50ஆண்டுகளை பூர்தி செய்யும் பொன்விழா நிகழ்வும், கல்லூரியின் 18வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியும் 2023.05.20ம் திகதி காலை 9.00 மணிக்கு பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் சம்மாந்துறையில் நடைபெற்றது. இந்நிகழ்வானது நமது கல்லூரியின் தலைவர் அஷ்-ஷெய்க் ஐ.எம்.இஸ்மாயில் (தப்லீகி) அவர்களின் தலைமையிலும் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் எஸ்.இஸ்மாலெப்பை (தப்லீகி) அவர்களின் முன்னிலையிலும் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக குவைத்நாட்டின் இலங்கைக்கான பதில்;தூதுவர் மேதகு பத்ர் எம்.எப்.எம்.எப். அல்-நுஙைமானி அவர்களும் சிறப்பு அதிதியாக கௌரவ அல்-ஹாபிழ் என்.எம்.அப்துள்ளாஹ் (மேல்; நீதிமன்ற நீதிபதி மட்டக்களப்பு), விசேட அதிதியாக அல்-ஹாஜ் அஷ்ஷெய்க் எம்.ஐ.அமீர் (மஜ்லிஷ் அஷ்ஷ{றாவின் முன்னாள் அமீர்,ஓய்வு நிலைஇராஜாங்க அமைச்சின்,முன்னாள் செயலாளர்) அவர்களும் விசேட பட்டமளிப்பு உரை நிகழ்த்துவதற்காக அஷ்-ஷெய்க் எம்.எச்.முஹம்மத் யூசுப் முப்தி (தவிசாளர், ஸம்ஸம் பவுன்டேசன் கொழும்பு) அவர்களும் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக அல்-ஹாஜ் அஷ்ஷெய்க் எம்.எம்.நயிமுடீன் (செயலாளர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு), அல்-ஹாஜ் யூ.எல்.எம்.ஜௌஹர் (மேலதிகச் செயலாளர், வெளிவிவகார அமைச்சு), அல்-ஹாஜ் ஏ.மன்சூர் (பிரதி பிரதம செயலாளர், கிழக்கு மாகாணம்), ஹாஜியானி றிபாஉம்மா ஜலீல் (பிரதி பிரதம செயலாளர், கிழக்கு மாகாணம்), அல்-ஹாஜ் ஐ.எம்.ஹனீபா (மேலதிக செயலாளர் இறப்பர் அபிவிருத்தி தினைக்களம், முன்னாள் அரசாங்க அதிபர்) அல்-ஹாஜ் எம்.எம்.நஸீர் (பேரவைச் செயலாளர், கிழக்கு மாகாணம்), அல்-ஹாஜ் எஸ்.எல்.முஹம்மட் ஹனீபா (பிரதேச செயலாளர், சம்மாந்துறை), அல்-ஹாஜ் ஐ.எம்.ஹ{சைன் (ஓய்வு நிலை பிரதி பிரதம செயலாளர் (நிதி)) அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழவின்போது கல்லூரியின் 50ம் பொன் விழா மலர் “அத்தப்லீகி” வெளியிடப்பட்டு, 2017ம் ஆண்டு தொடக்கம் 2022ம் ஆண்டு வரையாக 35 உலமாக்களுக்கும் 10 ஹாபிழ்களுக்கும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.