பிஸ்மில்லாஹீர்ரஹ்மானிர்ரஹீம்
மூட நம்பிக்கைகள் மலிந்து காணப்பட்ட அந்நாட்களில் எமது ஊர் மக்கள் வழிகேட்டின்பால் அள்ளுன்டு சென்றுவிடக்கூடாது என்று இந்த சமூகத்தின் கல்வி, கலாச்சாரம், நல்லொழுக்கத்தின்மேல் அக்கறைகொண்ட தீர்க்கதரிசிகளால் அன்று உதயானது எமது கல்லூரி.
ஆரம்பித்தகாலம்தொட்டு பலசவால்களை எதிர்கொண்டபோதிலும் மனஉறுதியும், அர்ப்பணிப்பும், திடகாத்திரமான முடிவுகளையும் அன்றைய கல்லூரியின் தலைமை ஆத்மீனச்சின்னம் MB. அலியார் ஹஸரத் நிர்வகித்த குழு எதிர்கொண்டது என்றால் மிகையாகாது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மட்டுமல்லாது அந்தந்த காலங்களுக்கேற்ப ஏற்படும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து பல ஹாபிழ்கள், உலமாக்கள், முப்திகள் என மட்டுல்லாது பாடசாலைக்கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரை மாணவர்களை தயார்படுத்துவதில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும், தனவந்தர்களும் கைகோர்ப்பது என்பது மகிழ்ச்சிகுரியதும், பாராட்டத்தக்கவேண்டிய விடயமாகும். அல்ஹம்துலில்லாஹ்
எமது பழையமாணவர்கள் நாட்டில் பல்துறைவல்லுனர்களாக வலம்வருவது எமது கல்லூரிக்குகிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும்.
இக்கல்லூரியின் பழையமாணவனாகிய நான் இக்கல்லூரிக்கு தலைவராக தெரிவுசெய்யப்பட்டதை மேலான கௌரவமாக நினைக்கிறேன், இறைவனைத்துதிக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ் இன்ஷாஅள்ளாஹ் நாங்கள் கல்விபயின்ற காலங்களில் எவ்வாறான அடைவுகளை இக்கல்லூரி பெற்றதோ அதேபோன்று தொடர்ந்து முன்னோக்கி செல்ல எமது நிருவாகக்குழு, பெற்றோர்கள், தனவந்தர்கள், ஊர்மக்கள் தொடர்ந்து செயல்பட அள்ளாஹ் அருள்புரிவானாக…..